Multi Media 24x7

Multi Media 24x7

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Monday, April 17, 2023

வாசலில் கண்ணீர் மல்க காத்து நின்ற பள்ளி மாணவி!

April 17, 2023 0

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரியின் மகளான இவர், ஈசிஆர்க்கு சுற்றுலா வந்த நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.



நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று அவரது வீட்டின் முன்னால் பள்ளி மாணவி ஒருவர் கண்ணீர் மல்க காத்து நின்ற வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்க்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அத்தகைய ரசிகர்களில் பலருக்கு விஜய்யை நேரில் பார்க்கவேண்டும் என்பது பெரும் கனவு.


அப்படித்தான் தமிழ்ச்செல்வி என்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் விஜய்யை பார்க்க வேண்டும் என அவரது வீட்டுக்கே நேராக சென்றார். ஆனால் வீடு பூட்டியிருந்ததால் தனது கோரிக்கையை விஜய் வீட்டு சிசிடிவி கேமரா முன்னால் கண்ணீர் மல்க கூறினார்.


காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரியின் மகளான இவர், ஈசிஆர்க்கு சுற்றுலா வந்த நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழ்ச்செல்வி மட்டுமல்லாது அவரது குடும்பமே விஜய் ரசிகர்கள்தான் என சொல்லப்படும் நிலையில் இந்த வீடியோவுக்கு விஜய்யின் ரியாக்சன் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Read More

Wednesday, April 12, 2023

உயிர் கொடுத்த தோழனுக்கு நண்பனாக மாறிய கொக்கு

April 12, 2023 0

உயிர் கொடுத்த தோழனுக்கு நண்பனாக மாறிய கொக்கு



உத்தரப் பிரதேசம் அமைதி மாவட்டம் மண்கா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முகமது ஆரிப் ஆண்டு தனது பயிலுக்கு சென்ற போது சாரஸ் எனப்படும் பெரியவகை கொக்கு ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் இருப்பதை கண்டார் உடனடியாக அதனை தனது வீட்டிற்கு எடுத்து வந்து காலில் கட்டு போட்டு உணவளித்தார்.

 கால் காயம் சரியான பிறகு ஆரிபை விட்டு பிரிய மறுத்த அந்த கொக்கு அவருடனே பயணிக்க ஆரம்பித்தது.

 ஆரிப் டூவீலரில் சென்றால் அவரை பின்தொடர்ந்து பறப்பது வாக்கிங் சென்றால் அவருடனையே நடப்பது என்று ஒரு தோழனாகவே மாறியது கொக்கு.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பைரலான நிலையில் சாரஸ் கொக்கு இனம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறிய வாரத்துறையின் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கொக்கை கான்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் சேர்த்தனர்

அன்பும், நட்பும் அனைத்து உயிர்களுக்குமானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் தன்னை காயத்திலிருந்து மீட்ட இளைஞரை சரணாலயத்தில் பார்த்ததும் சாரஸ் கொக்கு, ஆனந்தத்தில் துள்ளிக்குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது..

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி

முகமது ஆரிப். கடந்தாண்டு தனது வயலுக்குச் சென்ற போது சாரஸ் எனப்படும் பெரிய வகை கொக்கு ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் இருப்பதை கண்டார். உடனடியாக, அதனை தனது

வீட்டிற்கு எடுத்து வந்து காலில் கட்டுப்போட்டு உணவளித்தார்.

கால் காயம் சரியான பிறகு ஆரிப்பை விட்டு பிரிய மறுத்த அந்த கொக்கு அவருடனேயே பயணிக்க ஆரம்பித்தது. ஆரிப் டூவீலரில் சென்றால் அவரை பின்தொடர்ந்து பறப்பது, வாக்கிங் சென்றால் அவருடனேயே நடப்பது என்று ஒரு தோழனாகவே மாறியது கொக்கு. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், சாரஸ் கொக்கு இனம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறிய வனத்துறையினர் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கொக்கை கான்பூர் வனவிலங்கு சரணலாயத்தில் சேர்த்தனர்.

நண்பனை பிரிந்த சோகத்தில் இருந்த கொக்கு சரியாக உணவு சாப்பிடாமல் இருந்ததால், கொக்கின் நட்பும் பிரிவும் உத்தரப்பிரதேசத்தில் அரசியல் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில், சரணலாயத்திற்குச் சென்ற ஆரிப்பை பார்த்த்தும் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த கொக்கு ஆனந்த நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த வீடியோவை பாஜக எம்.பி வருண்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கொக்கை ஆரிப்புடன் சேர்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார்.

யானைக்குட்டிக்கும் மனிதர்களுக்குமான நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படமான தி எலிபன்ட் விஸ்பரஸ் ஆஸ்கர் விருதை பெற்று உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில், மனிதனுடனான கொக்கின் நட்பும் கவனத்தை ஈர்த்து, அன்பு செலுத்துவதற்கு அன்பைத் தவிர வேறெந்த காரணமும் தேவையில்லை என்பதை உணர்த்தியுள்ளது.
Read More

Saturday, October 15, 2022

வாடகை தாய் அம்பலம்மாக்கிய News Tamil

October 15, 2022 0



News Tamil 24x7

சூளைமேட்டில் திருமணமாகாத இளம்பெண்களை சட்டவிரோதமாக வாடகை தாய்களாக்கி ஒரே வீட்டுக்குள் அகதிகள் போல் அடைத்து வைத்திருப்பது குறித்து நியூஸ் தமிழ் பிரத்யேக செய்தி வெளியிட்டதும், அந்த வீடு பூட்டப்பட்டு கர்ப்பிணிகள் அனைவரும் வெளியில் வரமுடியாமல் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனிடையே, CFC மருத்துவமனை நிர்வாகிகள் நேரடியாக வந்து செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்து.


 செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததோடு, அவசர அவசரமாக வந்த போலீசாரும் ஆதாரத்தை பார்த்துவிட்டு வந்த வழியாகவே காரில் ஏறி திரும்பிச் சென்றனர்.

வாடகை தாய்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் தகவலை நியூஸ் தமிழ் செய்தியாளர் ஆதாரத்துடன் காண்பித்தும் கூட போலீசார் கண்டுகொள்ளாமல் சென்றது யாரை காப்பாற்றுவதற்காக என கேள்வி எழுந்துள்ளது.

Read More

Thursday, October 13, 2022

தீபாவளி.. போக்குவரத்துறை கொண்டு வந்த ஏற்பாடு..ஆம்னி மற்றும் பேருந்து பற்றி புகார்களை தெரிவிக்க எண்கள் - முழு விபரம்

October 13, 2022 0
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் அதை பொதுமக்கள் புகார் செய்யம் புகார்கள் செய்வதற்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  சென்னையில் இருந்து மட்டும் ஒட்டுமொத்தமாக 10,518 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார் .



Read More

Saturday, October 8, 2022

மனித கை போல விற்பனைக்கு வந்த அதிசய முள்ளங்கி

October 08, 2022 0

 


வாழப்பாடி தினசரி சந்தைக்கு விற்பனைக்கு வந்த முள்ளங்கி ஒன்று, 5 விரல்கள் கொண்ட மனிதர்களின் கைகளைப் போல காணப்பட்டது.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் என்பவர், தனது தோட்டத்தில் முள்ளங்கி பயிரிட்டுள்ளார். இன்று இவர் அறுவடை செய்து, வாழப்பாடி தினசரி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்த முள்ளங்கி ஒன்று, 5 விரல்கள் கொண்ட மனிதர்களின் கைகளைப் போல காணப்பட்டது.


இந்த அதிசய முள்ளங்கியை விவசாயிகளும், நுகர்வோர்களும், பொதுமக்களும் வியந்து பார்த்து சென்றனர்.


Read More

Sunday, September 25, 2022

என்ஜினீயர்களுக்கு வேலை

September 25, 2022 0

 UPSC தேர்வாணையத்தின் என்ஜினீயரிங் ஆள் சேர்ப்பு அமைப்பு சார்பில் 327 என்ஜினீயரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


சம்பந்தப்பட்ட துறை சார்ந்த என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


1-1-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-1-1993-க்கு முன்போ, 1-1-2002-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.


முதன் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-10-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://upsconline.nic.in/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.



Read More

Monday, September 19, 2022

பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய சிறுவன்: வாளால் 21 கேக்குகளை வெட்டிய வீடியோ வைரல்!

September 19, 2022 0

 


மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறந்தநாளில் 21 கேக்குகளை வாளால் வெட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை வெவ்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள். பலரும் தங்கள் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள்.


பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடிய சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்த நிலையில், மும்பையில் உள்ள போரிவலியில் இருந்து இதுபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் சமூகவலைதம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறந்தநாளில், வாளால் 21 கேக்குகளை வெட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அக்ரம் ஷேக்(17). இந்த சம்பவம் போரிவலி எம்ஹெச்பி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து வித்தியாசமாக கொண்டாட முடிவெடுத்து, கத்திக்கு பதிலாக ஒரு பெரிய வாளால் 21 கேக்குகளை வெட்டியுள்ளனர்.


அவர் வாளால் 21 கேக்குகளை வெட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டியதற்காக 17 வயது இளைஞர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் மும்பையின் எம்ஹெச்பி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மேலும், அந்த வீடியோ மூலம் அந்த இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.போலீசார் 17 வயது இளைஞரை கண்காணித்து நோட்டீஸ் வழங்கினர்.


போலீஸ் விசாரணையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணியளவில், 17 வயது சிறுவன் வாளால் 21 கேக்குகளை வெட்டியதை ஒப்புக்கொண்டான் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Read More

Friday, September 16, 2022

தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவும் எச்1என்1 காய்ச்சல்களுக்கு சிகிச்சை முறைகள்

September 16, 2022 0
தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவும் எச்1என்1 காய்ச்சல்: சிகிச்சை முறைகள் வெளியிட்டது சுகாதாரத்துறை

சென்னை: தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் சிகிச்சை முறைகள் தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளார்.


இதில் இந்த காய்ச்சலுக்கு திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி மற்றும் 100.4 டிகிரி வெப்பநிலையை 10 நாட்களில் அடைதல் , தலைவலி, மூக்கடைப்பு மற்றும் உடல் வலி , உடல் சோர்வு ஆகியவை அறிகுறிகள் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அனைத்து மருத்துவமனையிலும் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் , கர்ப்பிணிகள் , 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் , தீவிரமான சுவாசப் பிரச்சினை கொண்டவர்கள் , நீரழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த வகை பாதிப்புடன் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை , ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழ் குறைதல் ஆகிய பிரச்சினைகள் கண்டறியப்படும் பட்சத்தில் இன்ஃப்ளூவென்சா பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கியுள்ளார்.


குழந்தைகளிடம் அதிக பாதிப்பு: முன்னதாக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், " தமிழகத்தில் 282 குழந்தைகள் H1N1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். வருடா வருடம் பருவ மழைக் காலங்களில் இந்தக் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. கோவிட் காலத்தில் இரண்டு வருடமாக முகக்கவசம் அணிதல் தனிமனித இடைவெளியை சரியாக பின்பற்றியதன் காரணமாக இக் காய்ச்சல் தொற்று பரவல் குறைவாக இருந்தது.

ஆனால் தற்போது மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வு குறைந்துவிட்டதன் காரணமாக பருவமழைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குழந்தைகளுக்கிடையே பரவி வருகிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு நடத்தினோம். இங்கு 121 குழந்தைகள் காய்ச்சலால் சிகிச்சை பெறுகிறார்கள். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 8 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பதற்றப்பட வேண்டிய சூழல் இல்லை. பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை" என்று கூறினார்.
Read More

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA