Multi Media 24x7: உலக செய்திகள்

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts

Monday, September 5, 2022

ஏசி மூலம் பரவும் புதிய வகை வைரஸ் - 4 பேர் பலி

September 05, 2022 0

 அர்ஜென்டினாவில் ஏசி மூலம் பரவும் 'லெஜியோனேயர்ஸ்'என்ற நோயால் 4 பேர் பலியாகி உள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


உலகில் தற்போது நோய்களுக்கு பஞ்சமில்லை நாள் தோறும் புதுபுது நோய்கள் உருவாகின்றது. இந்தநிலையில் அர்ஜென்டினாவில் தற்போது ஏசி.யில் இருந்து புதிய வகை நோய் பரவி வருகிறது. இந்நோய் பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக அர்ஜென்டினாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதிக காய்ச்சல் , உடல்வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும் இரட்டை நிமோனியா நோய்க்கான அடிப்படைக் காரணம் லெஜியோனேயர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார மந்திரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இந்த நோயின் பெயர் 'லெஜியோனேயர்ஸ்.'இது, 'லெஜியோனெல்லா'என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டு, நுரையீரலை பாதிப்பதாக கூறப்படுகிறது. சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், இதே பகுதியில் மேலும் 7 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதே நேரம், தொற்று பாதித்தவரிடம் இருந்து மற்றவர்களுக்கு அது பரவவில்லை என கூறப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கடந்த 1976ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தின் படை பிரிவு வீரர்களிடையே 'லெஜியோனேயர்ஸ்'நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது.


'லெஜியோனெல்லா' பாக்டீரியா கொண்ட சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும் போதோ அல்லது இந்த பாக்டீரியா கலந்த தண்ணீரை குடித்தாலோ நுரையீரல் தொற்று ஏற்படும். அசுத்தமான நீர், அசுத்தமான ஏசி.களில் இருந்து இந்த பாக்டீரியா உருவாகி தாக்குவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



Read More

Wednesday, June 8, 2022

சேட்டை செய்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான் குரங்கு

June 08, 2022 0

 


மிருக காட்சி சாலையில் சேட்டை செய்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான் குரங்கு வீடியோ வைரலாகி உள்ளது.

இந்தோனேசியவை சேர்ந்தவர் ஹசன் அரிஃபின்( வயது 19) . இவர் ஜூன் 6 ஆம் தேதி இந்தோனேசியாவின் ரியாவில் உள்ள கசாங் குலிம் மிருகக்காட்சிசாலைக்கு சென்று உள்ளார்.

விலங்குகளை பார்வையிட்டு வந்த ஹசன் ஒரங்குட்டான் குரங்கு இருக்கும் கூண்டை பார்வயாளர்கள் தடுப்பை தாண்டி மேலே ஏறி உள்ளார். டினா என்ற ஒரங்குட்டான் குரங்குடன் அவர் விளையாடி உள்ளார். குரங்கு அவரது சட்டையை வசமாக பிடித்து கொண்டது . அவர் விடுபட முயற்சித்ததும் அவரது காலை பிடித்து கொண்டது. குரங்கு அவரது காலை பிடித்து இழுக்க ஆரம்பித்தது ஹசனும் போராடி உள்ளார். அவருடன் வேறு ஒரு நபரும் அவரை காப்பாற்ற போராடி உள்ளார். பிறகு ஹசன் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என உதவிக்கு கத்த ஆரம்பித்தார். காலை பிடித்து இருந்த குரங்கு தனது பிடியை தளர்த்தியது.மிருக காட்சி சாலையில் சேட்டை செய்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான் குரங்கு வீடியோ வைரலாகி உள்ளது.

மிருகக்காட்சிசாலையின் மேலாளர் டெஸ்ரிசல் கூறியதாவது:

அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. விலங்குகளின் அடைப்புகளை நெருங்க வேண்டாம் என்று பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகைகள் இருந்தபோதிலும் ஹசன் எச்சரிக்கைகளை மீறி உள்ளார். அதிகாரிகளின் அனுமதியின்றி வீடியோ எடுக்க ஒராங்குட்டான் கூண்டிற்கு அருகில் சென்று உள்ளார். பார்வையாளர் தடுப்புச்சுவரை தாண்டி குதித்து ஒராங்குட்டானை உதைத்து விதிகளை மீறியிருக்கிறார் என கூறினார்.


வீடியோ:

https://twitter.com/neutralizm_/status/1534002230000775168?s=20&t=x0GAftAaOyQlsdbRVrdfgw


Read More

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA