Multi Media 24x7: தேசிய செய்திகள்

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Showing posts with label தேசிய செய்திகள். Show all posts
Showing posts with label தேசிய செய்திகள். Show all posts

Monday, September 19, 2022

பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய சிறுவன்: வாளால் 21 கேக்குகளை வெட்டிய வீடியோ வைரல்!

September 19, 2022 0

 


மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறந்தநாளில் 21 கேக்குகளை வாளால் வெட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை வெவ்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள். பலரும் தங்கள் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள்.


பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடிய சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்த நிலையில், மும்பையில் உள்ள போரிவலியில் இருந்து இதுபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் சமூகவலைதம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறந்தநாளில், வாளால் 21 கேக்குகளை வெட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அக்ரம் ஷேக்(17). இந்த சம்பவம் போரிவலி எம்ஹெச்பி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து வித்தியாசமாக கொண்டாட முடிவெடுத்து, கத்திக்கு பதிலாக ஒரு பெரிய வாளால் 21 கேக்குகளை வெட்டியுள்ளனர்.


அவர் வாளால் 21 கேக்குகளை வெட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டியதற்காக 17 வயது இளைஞர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் மும்பையின் எம்ஹெச்பி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மேலும், அந்த வீடியோ மூலம் அந்த இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.போலீசார் 17 வயது இளைஞரை கண்காணித்து நோட்டீஸ் வழங்கினர்.


போலீஸ் விசாரணையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணியளவில், 17 வயது சிறுவன் வாளால் 21 கேக்குகளை வெட்டியதை ஒப்புக்கொண்டான் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Read More

Friday, June 24, 2022

ஆங்கிலம் சரியாக படிக்கவில்லை; 4 வயது சிறுவன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய டியூசன் ஆசிரியர்

June 24, 2022 0



ஆங்கிலம் சரியாக படிக்கவில்லை என கூறி 4 வயது சிறுவனை சரமாரியாக தாக்கிய டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.


திருவனந்தபுரம்,கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் பலுருதி பகுதியை சேர்ந்த பெற்றோர் எல்.கே.ஜி படிக்கும் தங்கள் 4 வயது மகனை அதேபகுதியில் டியூசன் ஆசிரியராக உள்ள அகில் (வயது 30) என்பரிடம் சேர்ந்துள்ளனர்.


இதனிடையே, 4 வயதான அந்த சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனின் உடலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தளும்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


இது குறித்து சிறுவனிடம் கேட்டபோது தான் ஆங்கில எழுத்துக்களை சரியாக படிக்காததால் டியூசன் ஆசிரியர் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, சிறுவனின் தாய் டியூசன் ஆசிரியர் அகிலிடம் கேட்டுள்ளார்.


ஆனால், இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனவும் போலீசில் புகார் அளிக்கக்கூடாது எனவும் சிறுவனின் தாயை அகில் மிரட்டியுள்ளார்.


சிறுவனை தாக்கியது, அதை கேட்கச் சென்றபோது மிரட்டல் விடுத்தது குறித்து சிறுவனின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.


புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டியூசன் ஆசிரியர் அகிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA