Multi Media 24x7: குமரி செய்தி

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Showing posts with label குமரி செய்தி. Show all posts
Showing posts with label குமரி செய்தி. Show all posts

Thursday, September 15, 2022

நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் பிரச்சாரம்; பொதுமக்கள் பாராட்டு

September 15, 2022 0

 


நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாலிபர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர்கள் ஜெனிஷ் (வயது 25), சுமிஷ் (25). பட்டதாரியான இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் வித்தியாசமான நிகழ்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டனர். அதன்படி வரதட்சணை கொடுமை மற்றும் வரதட்சணை ஒழிப்பு குறித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மணமகன்கள் கோலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.


இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் நூதன முறையில் ஜெனிஷ், சுமிஷ் ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இருவரும் மணமகன் கோலத்தில் கழுத்தில் விளம்பர பலகை அணிந்திருந்தனர். அதில், மணப்பெண் தேவை என்ற தலைப்புடன் வரதட்சணையாக கார், தங்கம், பணம் போன்றவை தேவையில்லை என்றும் சாதி, மதம் தேவையில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.


மேலும் பேருந்துநிலையத்தில் இருந்த வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது எனவும், பணத்தை விட குணத்தை எதிர்பார்த்து பெண்களை தேர்ந்தெடுங்கள் எனவும் தெரிவித்தனர்.


இவர்களது நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் பேருந்துநிலையத்தில் இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதே சமயத்தில் பொதுமக்கள் அவர்களின் செயலையும் பாராட்டினர்.



Read More

Monday, July 4, 2022

வருகின்ற ஜூலை 6-ம் தேதி எந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

July 04, 2022 0

 வருகின்ற ஜூலை 6-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.


குமரி மாவட்டத்தில் பிரசித்தி  பெற்ற கோவில்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வரும்  ஜூலை 6-ம் தேதி நடைபெற இருப்பதால் அதனை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 கன்னியாகுமரி மாவட்டம் - குழித்துறை தேவசம் தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில்  400 ஆண்டுகளுக்கு பிறகு மகா குடமுழுக்கு விழா 06-07-2022 புதன்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவிக்கப்பட்டுள்ளார்.



Read More

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA