Multi Media 24x7: Viral News

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Showing posts with label Viral News. Show all posts
Showing posts with label Viral News. Show all posts

Monday, April 17, 2023

வாசலில் கண்ணீர் மல்க காத்து நின்ற பள்ளி மாணவி!

April 17, 2023 0

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரியின் மகளான இவர், ஈசிஆர்க்கு சுற்றுலா வந்த நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.



நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று அவரது வீட்டின் முன்னால் பள்ளி மாணவி ஒருவர் கண்ணீர் மல்க காத்து நின்ற வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்க்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அத்தகைய ரசிகர்களில் பலருக்கு விஜய்யை நேரில் பார்க்கவேண்டும் என்பது பெரும் கனவு.


அப்படித்தான் தமிழ்ச்செல்வி என்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் விஜய்யை பார்க்க வேண்டும் என அவரது வீட்டுக்கே நேராக சென்றார். ஆனால் வீடு பூட்டியிருந்ததால் தனது கோரிக்கையை விஜய் வீட்டு சிசிடிவி கேமரா முன்னால் கண்ணீர் மல்க கூறினார்.


காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரியின் மகளான இவர், ஈசிஆர்க்கு சுற்றுலா வந்த நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழ்ச்செல்வி மட்டுமல்லாது அவரது குடும்பமே விஜய் ரசிகர்கள்தான் என சொல்லப்படும் நிலையில் இந்த வீடியோவுக்கு விஜய்யின் ரியாக்சன் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Read More

Wednesday, April 12, 2023

உயிர் கொடுத்த தோழனுக்கு நண்பனாக மாறிய கொக்கு

April 12, 2023 0

உயிர் கொடுத்த தோழனுக்கு நண்பனாக மாறிய கொக்கு



உத்தரப் பிரதேசம் அமைதி மாவட்டம் மண்கா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முகமது ஆரிப் ஆண்டு தனது பயிலுக்கு சென்ற போது சாரஸ் எனப்படும் பெரியவகை கொக்கு ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் இருப்பதை கண்டார் உடனடியாக அதனை தனது வீட்டிற்கு எடுத்து வந்து காலில் கட்டு போட்டு உணவளித்தார்.

 கால் காயம் சரியான பிறகு ஆரிபை விட்டு பிரிய மறுத்த அந்த கொக்கு அவருடனே பயணிக்க ஆரம்பித்தது.

 ஆரிப் டூவீலரில் சென்றால் அவரை பின்தொடர்ந்து பறப்பது வாக்கிங் சென்றால் அவருடனையே நடப்பது என்று ஒரு தோழனாகவே மாறியது கொக்கு.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பைரலான நிலையில் சாரஸ் கொக்கு இனம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறிய வாரத்துறையின் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கொக்கை கான்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் சேர்த்தனர்

அன்பும், நட்பும் அனைத்து உயிர்களுக்குமானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் தன்னை காயத்திலிருந்து மீட்ட இளைஞரை சரணாலயத்தில் பார்த்ததும் சாரஸ் கொக்கு, ஆனந்தத்தில் துள்ளிக்குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது..

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி

முகமது ஆரிப். கடந்தாண்டு தனது வயலுக்குச் சென்ற போது சாரஸ் எனப்படும் பெரிய வகை கொக்கு ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் இருப்பதை கண்டார். உடனடியாக, அதனை தனது

வீட்டிற்கு எடுத்து வந்து காலில் கட்டுப்போட்டு உணவளித்தார்.

கால் காயம் சரியான பிறகு ஆரிப்பை விட்டு பிரிய மறுத்த அந்த கொக்கு அவருடனேயே பயணிக்க ஆரம்பித்தது. ஆரிப் டூவீலரில் சென்றால் அவரை பின்தொடர்ந்து பறப்பது, வாக்கிங் சென்றால் அவருடனேயே நடப்பது என்று ஒரு தோழனாகவே மாறியது கொக்கு. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், சாரஸ் கொக்கு இனம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறிய வனத்துறையினர் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கொக்கை கான்பூர் வனவிலங்கு சரணலாயத்தில் சேர்த்தனர்.

நண்பனை பிரிந்த சோகத்தில் இருந்த கொக்கு சரியாக உணவு சாப்பிடாமல் இருந்ததால், கொக்கின் நட்பும் பிரிவும் உத்தரப்பிரதேசத்தில் அரசியல் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில், சரணலாயத்திற்குச் சென்ற ஆரிப்பை பார்த்த்தும் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த கொக்கு ஆனந்த நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த வீடியோவை பாஜக எம்.பி வருண்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கொக்கை ஆரிப்புடன் சேர்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார்.

யானைக்குட்டிக்கும் மனிதர்களுக்குமான நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படமான தி எலிபன்ட் விஸ்பரஸ் ஆஸ்கர் விருதை பெற்று உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில், மனிதனுடனான கொக்கின் நட்பும் கவனத்தை ஈர்த்து, அன்பு செலுத்துவதற்கு அன்பைத் தவிர வேறெந்த காரணமும் தேவையில்லை என்பதை உணர்த்தியுள்ளது.
Read More

Thursday, July 21, 2022

ஒரே அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டராக பணியாற்றும் காதல் தம்பதி..!

July 21, 2022 0

 


 கேரளாவில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டராக பணியாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைர்கலாகி  வருகிறது.


 கேரளாவை சேர்ந்த காதல் தம்பதி கிரி மற்றும் தாரா. கேரளா மாநில அரசு போக்குவரத்து பேருந்து ஒன்றில் கிரி  டிரைவராகவும், தாரா கண்டக்டராகவும் பணியை செய்து வருகின்றனர்.


 மற்ற பேருந்துகளை போன்று இது சாதாரணமான பேருந்து இல்லை.


 இந்தப் பேருந்தில், பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 சி.சி.டி.வி. கேமராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்களை கேட்கும் வசதி, குழந்தைகளை கவர வைக்கும் பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் ஆகியவற்றை கொண்டுள்ளது.


 பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் எல்.இ.டி. போர்டு வசதியும் இந்தப் பேருந்தில் உள்ளது. பேருந்து அழகாக தோற்றமளிக்க, இந்த தம்பதி தங்களது சொந்த நிதியை செலவிட்டு உள்ளனர்.


 இவர்களுக்கு ஏறத்தாழ ரசிக பெருமக்களும்  உள்ளனர்.


 இந்தப் பேருந்தில் அடிக்கடி வழக்கமாக பயணிப்பவர்கள்  தங்களுக்குள் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.


 இந்த வீடியோ வெளிவந்து பத்து லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் கண்டு களித்துள்ளனர்.


 இது பற்றி தாரா புன்னகையுடன் கூறும்போது, ஒவ்வொரு நாளும் நாங்கள் அதிகாலை 1.15 மணிக்கு எழுந்திருக்கின்றோம். 2 மணிக்கு பேருந்து டிப்போவுக்கு  சென்று விடுவோம்.


 பின்பு பேருந்தில் கிரி தூய்மை பணியை மேற்கொள்வார். பின்னர் எங்களுடைய பணி காலை 5.50 மணிக்கு தொடங்கும் என்று கூறுகின்றார்.


 இவர்களது கதை இதனுடன் நின்று விடவில்லை.


 சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர்களது காதல் 20 ஆண்டுகள் பழமையானது.


 கிரிக்கு 26 வயது இருக்கும் போது, தாராவுக்கு வயது 24. இருவரும் சந்தித்த பின்னர்  காதல் வயப்பட்டு உள்ளனர்.


 இருவரது காதலுக்கும்  இரு வீட்டிலும் பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லை.


 அவர்கள் பச்சைக்கொடி  காட்டிய பின்பு இருவரும் திருமணம் செய்யலாம் என ஏறக்குறைய முடிவானபோது, இருவரும் ஜாதகம் ஒத்து போகவில்லை.


 இதன் பின்னர் காத்திருந்து,  கொரோனா ஊரடங்கின் போது  இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


 இந்த வீடியோ சமூக  ஊடகங்களில் தற்போது வைரலாகி  வருகிறது.

Read More

Tuesday, July 19, 2022

"திருமண வரன்களை தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து தர வேண்டும்"- வில்லங்கத்தனமாக ஒட்டப்பட்ட போஸ்டர்..!!

July 19, 2022 0

 


 கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு எதிராக இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 இருப்பினும் கூட திருமணம் என்பதே பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியதும் தான்.


 குறிப்பாக வரன் பற்றிய விசாரணையின் போது ஆங் ஆங்கே    நடக்கும் கலவரங்கள்.


 அப்படிப்பட்ட சிக்கலை தான்  கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள்.


 கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை  அடுத்து  பாலவிளை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், உள்ளூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வரும் வரன்களை தடுத்து நிறுத்துவதாக கோபம் அடைந்துள்ளனர்.


பாலவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்களின் வரன்களை  தடுக்கும் ஆசாமிகளின் வீட்டில் உள்ள பெண்களை வரனாக கேட்கும் விதத்தில் வில்லங்கத்தனமாக போஸ்டர் ஒன்றை அடித்து தெருவுக்குத் தெரு பயணிகள் நிழற்குடை, சுவர்கள் என வரன்களை கெடுக்கும் ஆசாமிகள் பார்த்து அச்சப்படும்படி அளவு ஒட்டி உள்ளனர்.


 அதில் முக்கியமாக "திருமண வரங்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும்.


 "முக்கியமான குறிப்பு: சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படத்தை வைக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


 இந்த வில்லங்கத்தனமான போஸ்டர்  விவகாரம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இது பற்றி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு கருங்கல் ஆயினிவிலை பகுதியை சேர்ந்த  சில இளைஞர்கள்  ஒரு படி மேலே போய் அந்தப் பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.







Read More

Saturday, June 25, 2022

மணப்பெண்ணின் கழுத்தில் மாலை போடுவதற்கு பதிலாக கொழுந்தியார் கழுத்தில் மாலை போட்டதால் மாப்பிள்ளைக்கு பரிதாப நிலை..!

June 25, 2022 0


திருமணத்திற்கு குடிபோதையில் தள்ளாடியபடி  வந்த மாப்பிள்ளை மாலையை மணப்பெண் தங்கைக்கு அணிவித்த நிலையில், மணமேடையில் மணப்பெண் தங்கையிடம் தர்ம அடி வாங்கியுள்ளார்.


இது குறித்த வீடியோ காட்சியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகன் குடித்துவிட்டு மணமேடைக்கு வந்துள்ளார்.


இதனால் மணமகளின் தங்கை கோபத்தில் சத்தம் போட்டுக்கொண்டு ஆரத்தி எடுத்துவிட்டு,கையில் வைத்திருந்த மாலையை மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, மணப்பெண் கழுத்தில் போடுமாறு கூறியுள்ளார்.


ஆனால் மாப்பிள்ளை தள்ளாடியபடி நின்றுள்ளார்.


மணப்பெண் மாலையை மாப்பிள்ளை கழுத்தில் போட்ட பின்பு, மாப்பிள்ளையே மணப்பெண்ணின் தங்கையின் கழுத்தில் போட்டுள்ளார்.


இதனால் ஆவேசமடைந்த மச்சினிச்சி மாப்பிள்ளையை சரமாரியாக கன்னத்தில் அடித்துள்ளார்.


மணமகள் வேண்டாம் என்று தடுத்து நிறுத்தாமல் அவரது தங்கை மாப்பிள்ளையை தாக்கியுள்ளார்.


இந்த சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



https://twitter.com/Vikki19751/status/1539259892376162307?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1539259892376162307%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fperfectnewspost.com%2Fdrunken-bride-groom-was-beaten-by-brides-sister%2F

Read More

Wednesday, June 22, 2022

"யாராவது பொண்ணு கொடுங்கப்பா"... போஸ்டர் ஒட்டி நூதன முறையில் பெண் தேடும் இளைஞர்..!!

June 22, 2022 0

 


நான்கு ஆண்டுகளாக வரம் பார்த்தும் திருமணம் ஆகாததால், மதுரை மாநகர், புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என போஸ்டர் அடித்து பெண் தேடும் படலத்தை துவங்கி உள்ளார்.


மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல் மற்றும் சினிமா நடிகர்கள் குறித்தான போஸ்டர்களும், பழிக்கு பழியாக வசனங்களில் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் சித்தரிக்கப்படும் போஸ்டர்களும் பெருமளவில் பேசுபொருளாவது வழக்கம்.


இந்நிலையில், மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் (27) B.Sc.IT முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில், மாத வருமானமாக 40 ஆயிரம் சம்பாதிப்பதுடன் சொந்தமாக நிலமும் வைத்துள்ளார்.


நான்கு ஆண்டுகளாக வரம் பார்த்தும் திருமணம் ஆகாததால், மதுரை மாநகர் புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என போஸ்டர் அடித்து பெண் தேடும் படலத்தை துவங்கி உள்ளார்.


இதுகுறித்து 90 கிட்ஸ் ஜெகன் கூறுகையில், "நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும், பகுதி நேர வேலையாக பிரியாணி கடையிலும், மாமதுரை பப்ளிசிட்டி என்ற நிறுவனத்தில் போஸ்டர் ஒட்டும் பணியையும் செய்து வருகிறேன், பல பேருக்கு போஸ்டர் அடித்து ஒட்டும் நான், எனக்காக ஒரு போஸ்டர் ஒட்ட முடிவு செய்து இதை செய்துள்ளேன். இந்த போஸ்டரை பார்த்து பல பேர் கேலி, கிண்டல் செய்து தொலைபேசியில் பேசுவார்கள், ஆனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை.


நான்கு வருடமாக பெண் பார்த்தும் வரன் ஒன்று கூட அமையவில்லை, பெண் பார்க்கும் புரோக்கர்கள் ஜாதகம் மற்றும் பணத்தை வாங்கிச் செல்வார்கள், ஆனால் ஒரு பெண்ணை கூட காண்பிக்க மாட்டார்கள், இது புரோக்கர்களுக்கு வந்த சோதனையான அல்லது 90 கிட்ஸ்களுக்கு வந்த சோதனையா என தெரியவில்லை, போஸ்டரை பார்த்து பெண்கள் தொடர்பு கொள்வார்கள் என்று பார்த்தால் , மீண்டும் பெண் புரோக்கர்களே தொடர்பு கொள்கிறார்கள்" என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.


மேலும், அவருடைய நண்பர் பாசித் கூறுகையில், " பெண்கள் என் நண்பரின் படிப்பு, கல்வி, தகுதி ஆகியவை பார்த்து நிராகரித்து விடுகிறார்கள், தற்போது தான் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பெண்கள் தொடர்பு கொண்டு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றார்.n


ஏற்கனவே 90 கிட்ஸ் வேதனை அடையும் நிலையில், 2K கிட்ஸ் திருமணம் முடித்து குழந்தைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், நூதனமுறையில் மணமகள் தேவை என்று 90 கிட்ஸ் ஜெகன் செய்துள்ள செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






Read More

Tuesday, June 14, 2022

IT வேலையை ராஜினாமா செய்து விட்டு கழுதைப் பண்ணை அமைத்து ஒரே மாதத்தில் ரூ.17 லட்சம் சம்பாதித்த இளைஞர்

June 14, 2022 0

 


கர்நாடகா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தான் பார்த்து வந்த ஐ.டி வேலையை தூக்கி எறிந்து விட்டு கழுதைப் பண்ணை அமைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

கர்நாடகா மாநிலம் தக்சின கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாச கவுடா.


42 வயதான இவர் BA பட்டதாரி ஆவார்.


இதற்கு முன்னர் IT துறையில் வேலைப் பார்த்து வந்த இவர், 2020ஆம் ஆண்டு தனது வேலை துறையை துறந்து வேளாண் மற்றும் பண்ணைத் தொழிலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.


ஆரம்பத்தில் இவர் ஆடு, கோழி, முயல் போன்றவற்றை பண்ணையில் வளர்த்து வந்த நிலையில், இவருக்கு சமீப காலத்தில் தான் கழுதைப் பண்ணை அமைத்துள்ளார்.


இதுகுறித்து சீனிவாச கவுடா கூறுகையில், IT துறையில் பணி செய்துவந்த எனக்கு விலங்குகள் மீது மிகுந்த ஆர்வம்.


எனவே நான் எனது வேலையை விடுவித்து, சொந்த ஊரில் வளர்ப்பு பிராணிகள் பண்ணை வைத்து நடத்தி வருகிறேன்.


தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் சலவை தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.


இதனால் கழுதைகள் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. இதை கருத்தில் கொண்டு கழுதை பண்ணை அமைக்க முடிவு செய்தேன்.


அதன்படி கடந்த 8-ம் தேதி கர்நாடகத்தின் முதல் கழுதை பண்ணையை தொடங்கி உள்ளேன்.


தற்போது என்னிடம் 20 கழுதைகள் உள்ளன. 30 மில்லி கழுதைப்பால் ரூ.150-க்கு விற்கப்படுகிறது.


அழகு சாதன பொருட்கள் செய்ய கழுத்தைப்பால் பயன்படுவதால், அதற்கு நல்ல விலை உண்டு. தொடங்கி சிறிது நாட்களிலேயே ரூ.17 லட்சத்துக்கான டெண்டர் கிடைத்துள்ளது என கூறினார்.

Read More

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA