ஒரே அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டராக பணியாற்றும் காதல் தம்பதி..! - Multi Media 24x7

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Thursday, July 21, 2022

ஒரே அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டராக பணியாற்றும் காதல் தம்பதி..!

 


 கேரளாவில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டராக பணியாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைர்கலாகி  வருகிறது.


 கேரளாவை சேர்ந்த காதல் தம்பதி கிரி மற்றும் தாரா. கேரளா மாநில அரசு போக்குவரத்து பேருந்து ஒன்றில் கிரி  டிரைவராகவும், தாரா கண்டக்டராகவும் பணியை செய்து வருகின்றனர்.


 மற்ற பேருந்துகளை போன்று இது சாதாரணமான பேருந்து இல்லை.


 இந்தப் பேருந்தில், பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 சி.சி.டி.வி. கேமராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்களை கேட்கும் வசதி, குழந்தைகளை கவர வைக்கும் பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் ஆகியவற்றை கொண்டுள்ளது.


 பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் எல்.இ.டி. போர்டு வசதியும் இந்தப் பேருந்தில் உள்ளது. பேருந்து அழகாக தோற்றமளிக்க, இந்த தம்பதி தங்களது சொந்த நிதியை செலவிட்டு உள்ளனர்.


 இவர்களுக்கு ஏறத்தாழ ரசிக பெருமக்களும்  உள்ளனர்.


 இந்தப் பேருந்தில் அடிக்கடி வழக்கமாக பயணிப்பவர்கள்  தங்களுக்குள் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.


 இந்த வீடியோ வெளிவந்து பத்து லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் கண்டு களித்துள்ளனர்.


 இது பற்றி தாரா புன்னகையுடன் கூறும்போது, ஒவ்வொரு நாளும் நாங்கள் அதிகாலை 1.15 மணிக்கு எழுந்திருக்கின்றோம். 2 மணிக்கு பேருந்து டிப்போவுக்கு  சென்று விடுவோம்.


 பின்பு பேருந்தில் கிரி தூய்மை பணியை மேற்கொள்வார். பின்னர் எங்களுடைய பணி காலை 5.50 மணிக்கு தொடங்கும் என்று கூறுகின்றார்.


 இவர்களது கதை இதனுடன் நின்று விடவில்லை.


 சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர்களது காதல் 20 ஆண்டுகள் பழமையானது.


 கிரிக்கு 26 வயது இருக்கும் போது, தாராவுக்கு வயது 24. இருவரும் சந்தித்த பின்னர்  காதல் வயப்பட்டு உள்ளனர்.


 இருவரது காதலுக்கும்  இரு வீட்டிலும் பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லை.


 அவர்கள் பச்சைக்கொடி  காட்டிய பின்பு இருவரும் திருமணம் செய்யலாம் என ஏறக்குறைய முடிவானபோது, இருவரும் ஜாதகம் ஒத்து போகவில்லை.


 இதன் பின்னர் காத்திருந்து,  கொரோனா ஊரடங்கின் போது  இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


 இந்த வீடியோ சமூக  ஊடகங்களில் தற்போது வைரலாகி  வருகிறது.

No comments:

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA