Multi Media 24x7

tamil news,2022 news,head line news,local news,world news,nagercoil news,kanniyakumari news,bussiness news,accident news,oil news,petrol news,bike news,

Ads By Google

Ads by google

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

Top Insurance company

Popular Posts

Monday, April 17, 2023

வாசலில் கண்ணீர் மல்க காத்து நின்ற பள்ளி மாணவி!

April 17, 2023 0

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரியின் மகளான இவர், ஈசிஆர்க்கு சுற்றுலா வந்த நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.



நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று அவரது வீட்டின் முன்னால் பள்ளி மாணவி ஒருவர் கண்ணீர் மல்க காத்து நின்ற வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்க்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அத்தகைய ரசிகர்களில் பலருக்கு விஜய்யை நேரில் பார்க்கவேண்டும் என்பது பெரும் கனவு.


அப்படித்தான் தமிழ்ச்செல்வி என்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் விஜய்யை பார்க்க வேண்டும் என அவரது வீட்டுக்கே நேராக சென்றார். ஆனால் வீடு பூட்டியிருந்ததால் தனது கோரிக்கையை விஜய் வீட்டு சிசிடிவி கேமரா முன்னால் கண்ணீர் மல்க கூறினார்.


காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரியின் மகளான இவர், ஈசிஆர்க்கு சுற்றுலா வந்த நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழ்ச்செல்வி மட்டுமல்லாது அவரது குடும்பமே விஜய் ரசிகர்கள்தான் என சொல்லப்படும் நிலையில் இந்த வீடியோவுக்கு விஜய்யின் ரியாக்சன் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Read More

Wednesday, April 12, 2023

உயிர் கொடுத்த தோழனுக்கு நண்பனாக மாறிய கொக்கு

April 12, 2023 0

உயிர் கொடுத்த தோழனுக்கு நண்பனாக மாறிய கொக்கு



உத்தரப் பிரதேசம் அமைதி மாவட்டம் மண்கா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முகமது ஆரிப் ஆண்டு தனது பயிலுக்கு சென்ற போது சாரஸ் எனப்படும் பெரியவகை கொக்கு ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் இருப்பதை கண்டார் உடனடியாக அதனை தனது வீட்டிற்கு எடுத்து வந்து காலில் கட்டு போட்டு உணவளித்தார்.

 கால் காயம் சரியான பிறகு ஆரிபை விட்டு பிரிய மறுத்த அந்த கொக்கு அவருடனே பயணிக்க ஆரம்பித்தது.

 ஆரிப் டூவீலரில் சென்றால் அவரை பின்தொடர்ந்து பறப்பது வாக்கிங் சென்றால் அவருடனையே நடப்பது என்று ஒரு தோழனாகவே மாறியது கொக்கு.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பைரலான நிலையில் சாரஸ் கொக்கு இனம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறிய வாரத்துறையின் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கொக்கை கான்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் சேர்த்தனர்

அன்பும், நட்பும் அனைத்து உயிர்களுக்குமானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் தன்னை காயத்திலிருந்து மீட்ட இளைஞரை சரணாலயத்தில் பார்த்ததும் சாரஸ் கொக்கு, ஆனந்தத்தில் துள்ளிக்குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது..

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி

முகமது ஆரிப். கடந்தாண்டு தனது வயலுக்குச் சென்ற போது சாரஸ் எனப்படும் பெரிய வகை கொக்கு ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் இருப்பதை கண்டார். உடனடியாக, அதனை தனது

வீட்டிற்கு எடுத்து வந்து காலில் கட்டுப்போட்டு உணவளித்தார்.

கால் காயம் சரியான பிறகு ஆரிப்பை விட்டு பிரிய மறுத்த அந்த கொக்கு அவருடனேயே பயணிக்க ஆரம்பித்தது. ஆரிப் டூவீலரில் சென்றால் அவரை பின்தொடர்ந்து பறப்பது, வாக்கிங் சென்றால் அவருடனேயே நடப்பது என்று ஒரு தோழனாகவே மாறியது கொக்கு. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், சாரஸ் கொக்கு இனம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறிய வனத்துறையினர் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கொக்கை கான்பூர் வனவிலங்கு சரணலாயத்தில் சேர்த்தனர்.

நண்பனை பிரிந்த சோகத்தில் இருந்த கொக்கு சரியாக உணவு சாப்பிடாமல் இருந்ததால், கொக்கின் நட்பும் பிரிவும் உத்தரப்பிரதேசத்தில் அரசியல் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில், சரணலாயத்திற்குச் சென்ற ஆரிப்பை பார்த்த்தும் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த கொக்கு ஆனந்த நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த வீடியோவை பாஜக எம்.பி வருண்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கொக்கை ஆரிப்புடன் சேர்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார்.

யானைக்குட்டிக்கும் மனிதர்களுக்குமான நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படமான தி எலிபன்ட் விஸ்பரஸ் ஆஸ்கர் விருதை பெற்று உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில், மனிதனுடனான கொக்கின் நட்பும் கவனத்தை ஈர்த்து, அன்பு செலுத்துவதற்கு அன்பைத் தவிர வேறெந்த காரணமும் தேவையில்லை என்பதை உணர்த்தியுள்ளது.
Read More

Saturday, October 15, 2022

வாடகை தாய் அம்பலம்மாக்கிய News Tamil

October 15, 2022 0



News Tamil 24x7

சூளைமேட்டில் திருமணமாகாத இளம்பெண்களை சட்டவிரோதமாக வாடகை தாய்களாக்கி ஒரே வீட்டுக்குள் அகதிகள் போல் அடைத்து வைத்திருப்பது குறித்து நியூஸ் தமிழ் பிரத்யேக செய்தி வெளியிட்டதும், அந்த வீடு பூட்டப்பட்டு கர்ப்பிணிகள் அனைவரும் வெளியில் வரமுடியாமல் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனிடையே, CFC மருத்துவமனை நிர்வாகிகள் நேரடியாக வந்து செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்து.


 செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததோடு, அவசர அவசரமாக வந்த போலீசாரும் ஆதாரத்தை பார்த்துவிட்டு வந்த வழியாகவே காரில் ஏறி திரும்பிச் சென்றனர்.

வாடகை தாய்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் தகவலை நியூஸ் தமிழ் செய்தியாளர் ஆதாரத்துடன் காண்பித்தும் கூட போலீசார் கண்டுகொள்ளாமல் சென்றது யாரை காப்பாற்றுவதற்காக என கேள்வி எழுந்துள்ளது.

Read More

Thursday, October 13, 2022

தீபாவளி.. போக்குவரத்துறை கொண்டு வந்த ஏற்பாடு..ஆம்னி மற்றும் பேருந்து பற்றி புகார்களை தெரிவிக்க எண்கள் - முழு விபரம்

October 13, 2022 0
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் அதை பொதுமக்கள் புகார் செய்யம் புகார்கள் செய்வதற்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  சென்னையில் இருந்து மட்டும் ஒட்டுமொத்தமாக 10,518 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார் .



Read More

Saturday, October 8, 2022

மனித கை போல விற்பனைக்கு வந்த அதிசய முள்ளங்கி

October 08, 2022 0

 


வாழப்பாடி தினசரி சந்தைக்கு விற்பனைக்கு வந்த முள்ளங்கி ஒன்று, 5 விரல்கள் கொண்ட மனிதர்களின் கைகளைப் போல காணப்பட்டது.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் என்பவர், தனது தோட்டத்தில் முள்ளங்கி பயிரிட்டுள்ளார். இன்று இவர் அறுவடை செய்து, வாழப்பாடி தினசரி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்த முள்ளங்கி ஒன்று, 5 விரல்கள் கொண்ட மனிதர்களின் கைகளைப் போல காணப்பட்டது.


இந்த அதிசய முள்ளங்கியை விவசாயிகளும், நுகர்வோர்களும், பொதுமக்களும் வியந்து பார்த்து சென்றனர்.


Read More

Sunday, September 25, 2022

என்ஜினீயர்களுக்கு வேலை

September 25, 2022 0

 UPSC தேர்வாணையத்தின் என்ஜினீயரிங் ஆள் சேர்ப்பு அமைப்பு சார்பில் 327 என்ஜினீயரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


சம்பந்தப்பட்ட துறை சார்ந்த என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


1-1-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-1-1993-க்கு முன்போ, 1-1-2002-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.


முதன் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-10-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://upsconline.nic.in/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.



Read More

Monday, September 19, 2022

பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய சிறுவன்: வாளால் 21 கேக்குகளை வெட்டிய வீடியோ வைரல்!

September 19, 2022 0

 


மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறந்தநாளில் 21 கேக்குகளை வாளால் வெட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை வெவ்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள். பலரும் தங்கள் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள்.


பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடிய சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்த நிலையில், மும்பையில் உள்ள போரிவலியில் இருந்து இதுபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் சமூகவலைதம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறந்தநாளில், வாளால் 21 கேக்குகளை வெட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அக்ரம் ஷேக்(17). இந்த சம்பவம் போரிவலி எம்ஹெச்பி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து வித்தியாசமாக கொண்டாட முடிவெடுத்து, கத்திக்கு பதிலாக ஒரு பெரிய வாளால் 21 கேக்குகளை வெட்டியுள்ளனர்.


அவர் வாளால் 21 கேக்குகளை வெட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டியதற்காக 17 வயது இளைஞர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் மும்பையின் எம்ஹெச்பி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மேலும், அந்த வீடியோ மூலம் அந்த இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.போலீசார் 17 வயது இளைஞரை கண்காணித்து நோட்டீஸ் வழங்கினர்.


போலீஸ் விசாரணையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணியளவில், 17 வயது சிறுவன் வாளால் 21 கேக்குகளை வெட்டியதை ஒப்புக்கொண்டான் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Read More

Friday, September 16, 2022

தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவும் எச்1என்1 காய்ச்சல்களுக்கு சிகிச்சை முறைகள்

September 16, 2022 0
தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவும் எச்1என்1 காய்ச்சல்: சிகிச்சை முறைகள் வெளியிட்டது சுகாதாரத்துறை

சென்னை: தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் சிகிச்சை முறைகள் தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளார்.


இதில் இந்த காய்ச்சலுக்கு திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி மற்றும் 100.4 டிகிரி வெப்பநிலையை 10 நாட்களில் அடைதல் , தலைவலி, மூக்கடைப்பு மற்றும் உடல் வலி , உடல் சோர்வு ஆகியவை அறிகுறிகள் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அனைத்து மருத்துவமனையிலும் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் , கர்ப்பிணிகள் , 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் , தீவிரமான சுவாசப் பிரச்சினை கொண்டவர்கள் , நீரழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த வகை பாதிப்புடன் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை , ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழ் குறைதல் ஆகிய பிரச்சினைகள் கண்டறியப்படும் பட்சத்தில் இன்ஃப்ளூவென்சா பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கியுள்ளார்.


குழந்தைகளிடம் அதிக பாதிப்பு: முன்னதாக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், " தமிழகத்தில் 282 குழந்தைகள் H1N1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். வருடா வருடம் பருவ மழைக் காலங்களில் இந்தக் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. கோவிட் காலத்தில் இரண்டு வருடமாக முகக்கவசம் அணிதல் தனிமனித இடைவெளியை சரியாக பின்பற்றியதன் காரணமாக இக் காய்ச்சல் தொற்று பரவல் குறைவாக இருந்தது.

ஆனால் தற்போது மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வு குறைந்துவிட்டதன் காரணமாக பருவமழைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குழந்தைகளுக்கிடையே பரவி வருகிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு நடத்தினோம். இங்கு 121 குழந்தைகள் காய்ச்சலால் சிகிச்சை பெறுகிறார்கள். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 8 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பதற்றப்பட வேண்டிய சூழல் இல்லை. பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை" என்று கூறினார்.
Read More

Thursday, September 15, 2022

நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் பிரச்சாரம்; பொதுமக்கள் பாராட்டு

September 15, 2022 0

 


நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாலிபர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர்கள் ஜெனிஷ் (வயது 25), சுமிஷ் (25). பட்டதாரியான இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் வித்தியாசமான நிகழ்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டனர். அதன்படி வரதட்சணை கொடுமை மற்றும் வரதட்சணை ஒழிப்பு குறித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மணமகன்கள் கோலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.


இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் நூதன முறையில் ஜெனிஷ், சுமிஷ் ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இருவரும் மணமகன் கோலத்தில் கழுத்தில் விளம்பர பலகை அணிந்திருந்தனர். அதில், மணப்பெண் தேவை என்ற தலைப்புடன் வரதட்சணையாக கார், தங்கம், பணம் போன்றவை தேவையில்லை என்றும் சாதி, மதம் தேவையில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.


மேலும் பேருந்துநிலையத்தில் இருந்த வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது எனவும், பணத்தை விட குணத்தை எதிர்பார்த்து பெண்களை தேர்ந்தெடுங்கள் எனவும் தெரிவித்தனர்.


இவர்களது நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் பேருந்துநிலையத்தில் இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதே சமயத்தில் பொதுமக்கள் அவர்களின் செயலையும் பாராட்டினர்.



Read More

Tuesday, September 6, 2022

"கல்யாணத்துக்கு வாங்க - அடுத்த மாப்பிள்ளை நாங்க" - ஜாதகத்துடன் திருமண பேனர்

September 06, 2022 0

 


ஜாதகத்துடன் திருமண பேனர் "கல்யாணத்துக்கு வாங்க - அடுத்த மாப்பிள்ளை நாங்க" திருமண பேனர் ஒன்று கவனம் ஈர்த்து உள்ளது.


ராமநாதபுரத்தில் திருமணவிழா ஒன்றில் கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளைங்க நாங்க என்று நண்பர்கள் வைத்துள்ள பேனர் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருமண விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் பேனர்கள் வைக்கும் நிகழ்வு அதிகரித்துவிட்டது. பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டாலும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.


ராமநாதபுரத்தில் உள்ள திருமண மகால் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக நண்பர்கள் வைத்திருந்த பேனர் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த பேனரில் மணமக்கள் புகைப்படத்திற்கு கீழ் ஜாதக வடிவில் மணமகனின் நண்பர்கள் தங்கள் புகைப்படம், பெயர், ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு 'கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளைங்க நாங்க" என்று பெண் தேடும் படலத்தை பேனர் வடிவில் வைத்திருந்தனர்.


இதுகுறித்து மணமகனின் நண்பர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு பெண் பார்த்து வீட்டில் சளைத்துவிட்டனர். நல்ல பையனா என்று யார் பார்க்கின்றனர். வீடு இருக்கா, வேலை இருக்கா, சொத்து இருக்கா, வயசு எவ்ளோ, வங்கி இருப்பு எவ்ளோ என்று ஆயிரத்தொட்டு  கேள்வி கேட்டு, யோசித்து செல்கிறார்கள்  என்று நிராகரித்து விடுகின்றனர்.


அதனால் நாங்களே வித்தியாசமாக பெண் தேடுவோம் என்று இவ்வாறு படங்களை போட்டு அவரவர் ஜாதக விபரங்களை போட்டு பேனர் அடித்துள்ளோம். திருமண விழாவிற்கு வருபவர்களில் யாருக்காவது இதில் ஒருவரை பிடித்து திருமணம் நடந்தால் அதுவே எங்களுக்கு சந்தோசம்தான் என்றனர்.


Read More

Monday, September 5, 2022

ஏசி மூலம் பரவும் புதிய வகை வைரஸ் - 4 பேர் பலி

September 05, 2022 0

 அர்ஜென்டினாவில் ஏசி மூலம் பரவும் 'லெஜியோனேயர்ஸ்'என்ற நோயால் 4 பேர் பலியாகி உள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


உலகில் தற்போது நோய்களுக்கு பஞ்சமில்லை நாள் தோறும் புதுபுது நோய்கள் உருவாகின்றது. இந்தநிலையில் அர்ஜென்டினாவில் தற்போது ஏசி.யில் இருந்து புதிய வகை நோய் பரவி வருகிறது. இந்நோய் பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக அர்ஜென்டினாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதிக காய்ச்சல் , உடல்வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும் இரட்டை நிமோனியா நோய்க்கான அடிப்படைக் காரணம் லெஜியோனேயர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார மந்திரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இந்த நோயின் பெயர் 'லெஜியோனேயர்ஸ்.'இது, 'லெஜியோனெல்லா'என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டு, நுரையீரலை பாதிப்பதாக கூறப்படுகிறது. சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், இதே பகுதியில் மேலும் 7 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதே நேரம், தொற்று பாதித்தவரிடம் இருந்து மற்றவர்களுக்கு அது பரவவில்லை என கூறப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கடந்த 1976ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தின் படை பிரிவு வீரர்களிடையே 'லெஜியோனேயர்ஸ்'நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது.


'லெஜியோனெல்லா' பாக்டீரியா கொண்ட சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும் போதோ அல்லது இந்த பாக்டீரியா கலந்த தண்ணீரை குடித்தாலோ நுரையீரல் தொற்று ஏற்படும். அசுத்தமான நீர், அசுத்தமான ஏசி.களில் இருந்து இந்த பாக்டீரியா உருவாகி தாக்குவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



Read More

Monday, July 25, 2022

பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை வெளுத்து வாங்கிய பெண்..!

July 25, 2022 0

 


 தர்மபுரி பேருந்துநிலையத்தில் தனியாக நின்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவரை, போலீசார் கைது செய்தனர்.


 தர்மபுரி புறநகர் பேருந்துநிலையத்திற்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கிறது.


 அதேபோல் பல்வேறு  பணிகளுக்காக தினமும் ஆயிரங்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.


 இதனால் தர்மபுரி பேருந்துநிலையம் எப்போதும் பொதுமக்கள் நிரம்பி  பரபரப்பாக காணப்படும்.


 பேருந்து நிலையத்தின் நடுவே புறக்காவல் நிலையம் உள்ளது.


 இங்குள்ள காவல்துறையினர்  திருட்டு மற்றும் குற்றசம்பவங்களை தடுக்கும் பணியில் உள்ளனர்.


 ஆனாலும் காவல்துறையினர்  கண்காணிப்பு குறைவால் அடிக்கடி பயணிகளிடம்  பிக்பாக்கெட் அடிப்பது, வாகனத்திருட்டு, பெண்களிடம் கேலி கிண்டல் செய்வது, பாலியல் ரீதியாக சீண்டுவது, என அவ்வப்போது  குற்றங்கள்  நடப்பது வழக்கம்.


 இந்நிலையில் நேற்று  புறநகர் பேருந்து நிலையம்  திருப்பத்தூர் பேருந்துகள் நிற்கும்  இடத்தில் வெளியூர் செல்வதற்கான ஒரு  பெண் தனது  குழந்தைகளுடன் நின்றுள்ளார்.


 அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் குடிபோதையில் அங்கு  நின்றிருந்த பெண்ணை  தவறான முறையில் தொட்டுள்ளார்.


 இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் பொதுமக்கள் மத்தியில் இது போன்று   பெண்களிடம் நடந்துகொள்ளுவாயா  என திட்டி  முதியவரை சரமாரியாக  அடித்து கீழே தள்ளி  உதைத்துள்ளார்.


 இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் அப்பெண்ணின்  பிடியிலிருந்து தப்பித்தால் போதும்  என்று ஓடிவிட்டார்.


 பின்பு அந்தப்பெண் அங்கிருந்து தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு  அவர் செல்லும்  பேருந்து வந்தவுடன் ஏறி சென்றுவிட்டார்.


 மேலும் அப்பெண்ணிண் செயலை அங்குள்ள  பொதுமக்கள் பாராட்டினர்.


 அந்தப்பெண் முதியவரை அடித்ததை  அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் எடுத்து   சமூக வலைதளங்களில் பரப்பியதால் தற்போது அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.



Read More

கபடி விளையாட்டின் போது கபடி வீரருக்கு நடந்த சோகம்!

July 25, 2022 0

 


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21). கபடி அணி வீரரான இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம்ஆண்டு படித்து வந்தார்.


இந்நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார். நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர் கலந்து கொண்டு விளையாடினார்.


அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார். உடனே அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


வீடியோ :

https://youtube.com/shorts/rQlcj_lfFXc?feature=share

Read More

Saturday, July 23, 2022

உடலோடு சேர்த்து கட்டப்பட்ட பாடப்புத்தகம் – ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

July 23, 2022 0


 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.


இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


மாணவியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், நண்பகலிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.


அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் சாலையெங்கும் நின்று கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை கொடுத்தனர். பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்ய ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மாணவியின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மகள் ஸ்ரீமதிக்கு தந்தை இறுதி சடங்குகளை செய்தார். பின்னர், மாணவியின் உடல் அவரின் பாடப்புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


"என் மகளை நான் புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறேன்" - கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உருக்கம்


என் மகளை நான் புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறேன் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உருக்கமாக கூறி உள்ளார்.


மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது.


இதனையடுத்து இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் இன்று காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இதன்காரணமாக காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் உள்ளது. பாடப் புத்தகத்தோடு மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


மாணவி ஸ்ரீமதியின் உடலோடு பாட புத்தகம் சேர்த்து கட்டப்பட்டது. அவர் மருத்துவ படிப்பை தேர்வு செய்ய எண்ணியிருந்தார். இதனால் அவரது ஆசையை நிறைவேற்ற உயிரியல் புத்தகம் மாணவியின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது. இது காண்போரின் கண்களில் கண்ணீரை வரச் செய்தது.


முதல் முறையாக பெரியநெசலூர் மயானத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்துள்ளனர். மயானத்தில் நடைபெறும் இறுதி சடங்கில் அமைச்சர் கணேசன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.


கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன். அவள் மரமாக வளர்ந்து இதற்கு காரணமானவர்களை வேரறுப்பாள்; இனியும் இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நடைபெறக்கூடாது.


என் மகள் மரணத்தில் பள்ளி தாளாளர், அவரது மனைவி, மகன்கள், பள்ளி ஆசிரியைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் குற்றவாளிகள்; அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.


தமிழக அரசு தற்போது வேகமாக வழக்கை விசாரித்து வருகிறது. நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என கூறினார்.













Read More

Thursday, July 21, 2022

ஒரே அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டராக பணியாற்றும் காதல் தம்பதி..!

July 21, 2022 0

 


 கேரளாவில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டராக பணியாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைர்கலாகி  வருகிறது.


 கேரளாவை சேர்ந்த காதல் தம்பதி கிரி மற்றும் தாரா. கேரளா மாநில அரசு போக்குவரத்து பேருந்து ஒன்றில் கிரி  டிரைவராகவும், தாரா கண்டக்டராகவும் பணியை செய்து வருகின்றனர்.


 மற்ற பேருந்துகளை போன்று இது சாதாரணமான பேருந்து இல்லை.


 இந்தப் பேருந்தில், பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 சி.சி.டி.வி. கேமராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்களை கேட்கும் வசதி, குழந்தைகளை கவர வைக்கும் பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் ஆகியவற்றை கொண்டுள்ளது.


 பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் எல்.இ.டி. போர்டு வசதியும் இந்தப் பேருந்தில் உள்ளது. பேருந்து அழகாக தோற்றமளிக்க, இந்த தம்பதி தங்களது சொந்த நிதியை செலவிட்டு உள்ளனர்.


 இவர்களுக்கு ஏறத்தாழ ரசிக பெருமக்களும்  உள்ளனர்.


 இந்தப் பேருந்தில் அடிக்கடி வழக்கமாக பயணிப்பவர்கள்  தங்களுக்குள் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.


 இந்த வீடியோ வெளிவந்து பத்து லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் கண்டு களித்துள்ளனர்.


 இது பற்றி தாரா புன்னகையுடன் கூறும்போது, ஒவ்வொரு நாளும் நாங்கள் அதிகாலை 1.15 மணிக்கு எழுந்திருக்கின்றோம். 2 மணிக்கு பேருந்து டிப்போவுக்கு  சென்று விடுவோம்.


 பின்பு பேருந்தில் கிரி தூய்மை பணியை மேற்கொள்வார். பின்னர் எங்களுடைய பணி காலை 5.50 மணிக்கு தொடங்கும் என்று கூறுகின்றார்.


 இவர்களது கதை இதனுடன் நின்று விடவில்லை.


 சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர்களது காதல் 20 ஆண்டுகள் பழமையானது.


 கிரிக்கு 26 வயது இருக்கும் போது, தாராவுக்கு வயது 24. இருவரும் சந்தித்த பின்னர்  காதல் வயப்பட்டு உள்ளனர்.


 இருவரது காதலுக்கும்  இரு வீட்டிலும் பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லை.


 அவர்கள் பச்சைக்கொடி  காட்டிய பின்பு இருவரும் திருமணம் செய்யலாம் என ஏறக்குறைய முடிவானபோது, இருவரும் ஜாதகம் ஒத்து போகவில்லை.


 இதன் பின்னர் காத்திருந்து,  கொரோனா ஊரடங்கின் போது  இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


 இந்த வீடியோ சமூக  ஊடகங்களில் தற்போது வைரலாகி  வருகிறது.

Read More

Tuesday, July 19, 2022

"திருமண வரன்களை தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து தர வேண்டும்"- வில்லங்கத்தனமாக ஒட்டப்பட்ட போஸ்டர்..!!

July 19, 2022 0

 


 கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு எதிராக இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 இருப்பினும் கூட திருமணம் என்பதே பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியதும் தான்.


 குறிப்பாக வரன் பற்றிய விசாரணையின் போது ஆங் ஆங்கே    நடக்கும் கலவரங்கள்.


 அப்படிப்பட்ட சிக்கலை தான்  கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள்.


 கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை  அடுத்து  பாலவிளை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், உள்ளூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வரும் வரன்களை தடுத்து நிறுத்துவதாக கோபம் அடைந்துள்ளனர்.


பாலவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்களின் வரன்களை  தடுக்கும் ஆசாமிகளின் வீட்டில் உள்ள பெண்களை வரனாக கேட்கும் விதத்தில் வில்லங்கத்தனமாக போஸ்டர் ஒன்றை அடித்து தெருவுக்குத் தெரு பயணிகள் நிழற்குடை, சுவர்கள் என வரன்களை கெடுக்கும் ஆசாமிகள் பார்த்து அச்சப்படும்படி அளவு ஒட்டி உள்ளனர்.


 அதில் முக்கியமாக "திருமண வரங்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும்.


 "முக்கியமான குறிப்பு: சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படத்தை வைக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


 இந்த வில்லங்கத்தனமான போஸ்டர்  விவகாரம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இது பற்றி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு கருங்கல் ஆயினிவிலை பகுதியை சேர்ந்த  சில இளைஞர்கள்  ஒரு படி மேலே போய் அந்தப் பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.







Read More

Monday, July 4, 2022

வருகின்ற ஜூலை 6-ம் தேதி எந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

July 04, 2022 0

 வருகின்ற ஜூலை 6-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.


குமரி மாவட்டத்தில் பிரசித்தி  பெற்ற கோவில்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வரும்  ஜூலை 6-ம் தேதி நடைபெற இருப்பதால் அதனை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 கன்னியாகுமரி மாவட்டம் - குழித்துறை தேவசம் தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில்  400 ஆண்டுகளுக்கு பிறகு மகா குடமுழுக்கு விழா 06-07-2022 புதன்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவிக்கப்பட்டுள்ளார்.



Read More

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்

July 04, 2022 0


 குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அலிகான் கன்னியாகுமரி மேல் மிடாலம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது இதில் அழிக்கால் பகுதியில் ராட்சத அலைகள் எழுந்து கரை நோக்கி ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து கடல் நீர் ஊருக்குள் புகுந்தன இதனால் வீடுகளில் வசிக்கும் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது வீட்டின் பொருட்கள் தண்ணீரில் மேலும் வேண்டும்

Read More

Saturday, June 25, 2022

மணப்பெண்ணின் கழுத்தில் மாலை போடுவதற்கு பதிலாக கொழுந்தியார் கழுத்தில் மாலை போட்டதால் மாப்பிள்ளைக்கு பரிதாப நிலை..!

June 25, 2022 0


திருமணத்திற்கு குடிபோதையில் தள்ளாடியபடி  வந்த மாப்பிள்ளை மாலையை மணப்பெண் தங்கைக்கு அணிவித்த நிலையில், மணமேடையில் மணப்பெண் தங்கையிடம் தர்ம அடி வாங்கியுள்ளார்.


இது குறித்த வீடியோ காட்சியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகன் குடித்துவிட்டு மணமேடைக்கு வந்துள்ளார்.


இதனால் மணமகளின் தங்கை கோபத்தில் சத்தம் போட்டுக்கொண்டு ஆரத்தி எடுத்துவிட்டு,கையில் வைத்திருந்த மாலையை மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, மணப்பெண் கழுத்தில் போடுமாறு கூறியுள்ளார்.


ஆனால் மாப்பிள்ளை தள்ளாடியபடி நின்றுள்ளார்.


மணப்பெண் மாலையை மாப்பிள்ளை கழுத்தில் போட்ட பின்பு, மாப்பிள்ளையே மணப்பெண்ணின் தங்கையின் கழுத்தில் போட்டுள்ளார்.


இதனால் ஆவேசமடைந்த மச்சினிச்சி மாப்பிள்ளையை சரமாரியாக கன்னத்தில் அடித்துள்ளார்.


மணமகள் வேண்டாம் என்று தடுத்து நிறுத்தாமல் அவரது தங்கை மாப்பிள்ளையை தாக்கியுள்ளார்.


இந்த சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



https://twitter.com/Vikki19751/status/1539259892376162307?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1539259892376162307%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fperfectnewspost.com%2Fdrunken-bride-groom-was-beaten-by-brides-sister%2F

Read More

Friday, June 24, 2022

ஆங்கிலம் சரியாக படிக்கவில்லை; 4 வயது சிறுவன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய டியூசன் ஆசிரியர்

June 24, 2022 0



ஆங்கிலம் சரியாக படிக்கவில்லை என கூறி 4 வயது சிறுவனை சரமாரியாக தாக்கிய டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.


திருவனந்தபுரம்,கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் பலுருதி பகுதியை சேர்ந்த பெற்றோர் எல்.கே.ஜி படிக்கும் தங்கள் 4 வயது மகனை அதேபகுதியில் டியூசன் ஆசிரியராக உள்ள அகில் (வயது 30) என்பரிடம் சேர்ந்துள்ளனர்.


இதனிடையே, 4 வயதான அந்த சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனின் உடலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தளும்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


இது குறித்து சிறுவனிடம் கேட்டபோது தான் ஆங்கில எழுத்துக்களை சரியாக படிக்காததால் டியூசன் ஆசிரியர் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, சிறுவனின் தாய் டியூசன் ஆசிரியர் அகிலிடம் கேட்டுள்ளார்.


ஆனால், இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனவும் போலீசில் புகார் அளிக்கக்கூடாது எனவும் சிறுவனின் தாயை அகில் மிரட்டியுள்ளார்.


சிறுவனை தாக்கியது, அதை கேட்கச் சென்றபோது மிரட்டல் விடுத்தது குறித்து சிறுவனின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.


புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டியூசன் ஆசிரியர் அகிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More

Popular Posts

Subscribe Us

< https://youtube.com/channel/UCYDuz-IJYDe0CTnsumMHazA